தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் - முதலமைச்சர் மு . க . ஸ்டாலின்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது . வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . அதே போல் கர்நாடகா , உத்தரப் பிரதேசம் , ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன .

இந்நிலையில் , ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது . 

அதில் பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்றும், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும் , பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில்தான் என்று கூறினார் . 

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்ததாக தெரிவித்தார்.

அதன்படி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment