தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது பாலியல் புகார்கள் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் இந்த பாலியல் புகார் பெட்டி அமைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளுக்கும் தலா 2000 வீதம் ரூபாய் ரூபாய் 7.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் வழிமுறைகளும் வெளியிடப்பட்டன இதனடிப்படையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களின் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி வைக்க வேண்டும். புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதில் இருக்கும் புகார்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகளை அமைக்க வேண்டும். இது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.
No comments:
Post a Comment