ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட சான்றிதழ்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் நீட்டிப்பு.! தமிழக அரசு உத்தரவு

பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்து கழக நிர்வாக இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களில் மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொது போக்குவரத்து வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 31.12.2021 வரை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல, தமிழகத்திலும் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்களை செல்லுபடியாகும் கால அவகாசத்தை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனோ தொற்று பாதிப்பினை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொது மக்களின் நலன் கருதியும், வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் (தகுதிச்சான்று, புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு மற்றும் இதர ஆவணங்கள்) செல்லுபடி ஆகும் கால அளவினை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டித்து அரசாணையை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment