கோவை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வாங்க தகுதியுள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், தலா 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். தகுதியானவர்களிடம் இருந்து, கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதுவரை 1,800 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இம்மாதம் இறுதி வரை பெறப்படும். ஒரு ஒன்றியத்துக்கு, 100 பெண் பயனாளிக்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மானிய ஆடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment