பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment