14-ம் தேதி முதல் நீங்கெல்லாம் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிகல்வித்துறை உத்தரவு

மதிப்பெண் வழங்கும் பணி உள்ளதால் தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 14-ந்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் என்று கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது?, உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

கொரோனா நோய் தொற்று உள்ள நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது தொடர்பாகவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 14-ந் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment