தேவையானவை:
அரிசி மாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை.
பூரணம் தயாரிக்க:
தேங்காய் துருவல்- ½ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை.
செய் முறை:
பாத்திரத்தில் தண்ணீரை(திட்டமாக) கொதிக்கவைத்து, அதில் அரிசி மாவை போட்டு கிளற வேண்டும். மாவு வேகும்போதே சிறிது நல்லெண்ணெய் விட்டு கிளறினால் மாவு அதிகம் ஒட்டாமல் வரும். பின் மாவை ஆறவைத்து கிண்ணங்களாகச் செய்து கொண்டு, வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து கிளறிய பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி மாவால் செய்த கிண்ணத்தில் உள்ளே வைத்து கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment