தேவையானவை:
மைதாமாவு,
ரவை- தலா ½ கப்,
உப்பு- 1 சிட்டிகை.
பூரணம் தயாரிக்கத் தேவையானவை:
தேங்காய் துருவல்- ½ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை,
பொரித்தெடுக்க எண்ணெய்- ¼ லிட்டர்.
செய்முறை:
முதலில் ரவை, மைதா இரண்டையும் சிறிது நீர், சிறிது எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். தேங்காய், வெல்லத்தூள், ஏலப்பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்துப் பூரணம் தயாரிக்க வேண்டும். மாவை சிறு உருண்டைகளாக்கி அப்பளம் போல் இட்டு அதில் பூரணம் வைத்து மூடி கொழுக்கட்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இதுவே ரவை கொழுக்கட்டை.
No comments:
Post a Comment