தேவையானவை :
கருப்பு எள்- 1 கப்,
வெல்லம்- ¼ கப்,
ஏலப்பொடி- 2 சிட்டிகை,
அரிசி மாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை,
எண்ணெய்- 2 ஸ்பூன்.
செய்முறை :
வெறும் வாணலியில் எள்ளைப் பட படவென்று பொரியுமாறு வறுத்துக் கொண்டு, எள்ளைப் பொடித்துக் கொண்டு பின் அத்துடன் வெல்லப் பொடி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து பாத்திரத்தில் மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து மாவு வெந்ததும் இறக்கி ஆறவிட்டு சிறு உருண்டைகள் செய்து, அதைக் கிண்ணங்களாகச் செய்து கொள்ள வேண்டும். அந்தக் கிண்ணங்களில் (கொழுக்கட்டை செப்பு) எள் பூரணத்தை வைத்து நீளவாக்கில் மூடி ஆவியில் வேக விட்டு எடுக்க வேண்டும். இதுவே எள்ளுக் கொழுக்கட்டை
No comments:
Post a Comment