தேவையானவை :
அரிசி மாவு- 1 கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 2 சிட்டிகை,
தேங்காய் பல்- 2 ஸ்பூன்.
செய்முறை :
பாத்திரத்தில் வெல்லத்தூள் ¼ கப்பில் ¼ கப் நீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் மாவு, தேங்காய் பல், ஏலப்பொடி சேர்த்து கெட்டியாகக் கிளறவும். நீர் போதவில்லையெனில் சிறிது தெளித்துக் கொள்ளலாம். ஆறியதும் கைகளில் எடுத்துப் பிடித்துப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுக்க வேண்டும். இதுவே இனிப்புப் பிடிக் கொழுக்கட்டை.
No comments:
Post a Comment