தேவையானவை :
அரிசிமாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை.
தாளிக்க :
எண்ணெய்- திட்டமாக,
கடுகு- 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்,
பெருங்காயம்- 1 சிட்டிகை,
கறிவேப்பிலை- 4 இலைகள்,
காரப்பொடி- தேவைக்கேற்ப.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் நீரூற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் மாவைப் போட்டுக் கிளற வேண்டும். ஆறியதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக சீடைபோல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். பிறகு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, உருண்டைகளை போட்டு காரப் பொடி சேர்த்துப் பிரட்டி எடுக்க வேண்டும். இதுவே அம்மணிக் கொழுக்கட்டை.
No comments:
Post a Comment