உளுந்து பூரண கொழுக்கட்டை

தேவையானவை :


உளுத்தம் பருப்பு- 1 கப்,
பச்சைமிளகாய்- 4,
உப்பு- தேவையான அளவு ,
பெருங்காயத்தூள்- 2 சிட்டிகை,
அரிசி மாவு- 2 கப்.

தாளிக்க :

எண்ணெய்- 2 ஸ்பூன்,
கடுகு- 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை- 4 இலைகள்.

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு, அதை ஆவியில் வேகவிட்டு உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை கிள்ளி தாளிக்க வேண்டும். பாத்திரத்தில் மாவை நீர்விட்டு 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு, அரிசி மாவை போட்டு கட்டிதட்டாமல் நன்கு கிளற வேண்டும். மாவு வெந்ததும் ஆற வைத்து சிறு ஊருண்டைகளாக எலுமிச்சை சைஸில் உருட்டி கிண்ணம் செய்து அதில் செப்பு கொள்ளுமளவிற்கு பூரணம் வைத்து மூடி (நீள ஷேப்பில்) ஆவியில் வேகவிட வேண்டும். அதுவே உளுந்து பூரண கொழுக்கட்டை.

No comments:

Post a Comment