தேவையானவை:
பச்சரிசி- 1 கப்,தேங்காய் துருவியது- ½ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை,
தூள் வெல்லம்- 1 கப்.
செய்முறை :
பச்சரிசியை நன்கு ஊறவைத்து களைந்து வடிகட்டி அதோடு தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லத் தூளை திட்டமாக நீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். அதில் ஏலப்பொடி சேர்க்க வேண்டும். கொதிக்கும் போதே அதில் நைசாகவும், கெட்டியாகவும் அரைத்து இருக்கும் விழுதை சிறு சிறு சீடைகளாக கொஞ்சம் உருட்டிப் போட்டுக் கிளறி மீண்டும் சிறிதளவு உருட்டிப் போட்டுக் கிளற வேண்டும். அதாவது முதலில் உருட்டிப் போட்டவை சிறிது வெந்ததும் மீண்டும் ஒரு முறை போட்டுக் கிளற வேண்டும். இதுபோல் செய்தால் கூழ்போல் ஆகாமல் தனித்தனி உருண்டைகளாகவும், வெல்லத் தண்ணீர் சுவையுடனும் பால் கொழுக்கட்டை சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment