
கண் திருஷ்டி இருக்குன்னு நினைக்கறீங்களா? இந்த ஒரு விஷயத்தைச் செய்து வந்தாலே போதும். ஆனா, அப்படி செய்ய துவங்குறது வெள்ளிக்கிழமையா இருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாளாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். முடிந்தால், அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி அம்மனை வணங்குவது சிறப்பு.
வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும், கண் திருஷ்டியையும் நீக்கும்.

வெள்ளிக்கிழமைகளில், துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.
No comments:
Post a Comment